சென்னை, செப்.16- தமிழகத்தில் மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். மின்சார வாகனங்களுக்கு செலுத்தப்பட்ட எஸ்.ஜி.எஸ்.டி. வரியானது 100 விழுக்காடு திருப்பிக் கொடுக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மின்சார வாகனங்கள் உற்பத்தி துறையில் 50,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன் மூலம் ஒன்றரை லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், மின்சார வாகன உற்பத்தி மற்றும் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான கொள்கையை தமிழக அரசு வகுத்துள்ளது. கொள்கை புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியானது தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கொள்கை புத்தகத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.மின்சார வாகன உற்பத்தியையும் பயன்பாட்டையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
மின்சார இருசக்கர வாகனங்கள், மின்சார மினி பேருந்துகள், மின்சார மூன்று சக்கர வாக னங்கள், மின்சார இலகு ரக சரக்கு வாகனங் களுக்கு 2022ஆம் ஆண்டு இறுதி வரை 100 விழுக் காடு மோட்டார் வாகன வரிவிலக்கு அளிக்கப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2030ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் மின்சார வாகனங் களுக்கான மாநில சரக்கு மற்றும் சேவை வரி 100 விழுக்காடு திரும்ப வழங்கப்படும், மின் வாகன உற்பத்தி முதலீடுகளுக்கு 15 விழுக்காடு வரை யிலும், மின் கலன் உற்பத்திக்கான முதலீடு களுக்கு 20 விழுக்காடு வரையிலும் மூலதன மானி யம் வழங்கப்படும் என தமிழக அரசு கூறியுள் ளது. மின் வாகனம், மின்னேற்று உபகரணங்கள் மற்றும் மின்கலன் ஆலைகள் அமைக்க நிலம் வாங்கும் போது 2022ஆம் ஆண்டு வரை 100 விழுக்காடு முத்திரைத் தாள் கட்டண விலக்கு அளிக்கப்படும். 50 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தும், குறைந்தபட்சம் 50 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு இந்தச் சலுகைகள் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பொருட்டு, 2025ஆம் ஆண்டு வரை உருவாக்கப் படும் ஒவ்வொரு புதிய வேலை வாய்ப்புக்கும், நிறுவனங்களின் பங்களிப்பாக செலுத்திய தொழி லாளர் சேமநல நிதிக்கு ஈடான தொகை மானிய மாக வழங்கப்படும் என கொள்கை வகுக்கப்பட் டுள்ளது. மின்சார வாகன உற்பத்தியில் முதலீடு களை ஈர்க்கும் திறன் கொண்ட பகுதிகளில் அரசு சார்பில் பிரத்யேக மின்சார வாகன உற்பத்தி தொழிற் பூங்காக்கள் உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மொத்தமுள்ள 21,000 அரசுப் பேருந்துகளுக்கு மாற்றாக ஆண்டுதோறும் 5 விழுக்காடு அளவுக்கு மின்சாரப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் மற்றும் நெல்லை ஆகிய மாநகரங்களில் மின்சாரத்தால் இயங்கும் வகை யில் ஆட்டோக்களை மாற்ற முயற்சி மேற்கொள்ளப் படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.